சந்திரோதய வித்தியாசாலை
உரும்பிராய்ச் சந்தியின் அயலிலுள்ள காணியில் 28.10.1982 இல் ஆரம்பிக்கப்பெற்ற உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலை. மாணவர் கூடக்கூட இடநெருக்கடியும் ஏற்பட்டது.
றோமன் கத்தோலிக்க பாடசாலை
கத்தோலிக்க சமயக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி கருதி 18.10.1916 இல் நிறுவப்பட்டதே உரும்பிராய் றோமன் கத்தோலிக்க பாடசாலை. சமய அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை சமயசேவை புரிந்ததுடன் விஷேடமாக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்தது என்பதைக் கல்வியில் நாட்டமுள்ள பெரியவர்கள் ஒத்துக் கொள்வார்கள்.
சைவத்தமிழ் வித்தியாலயம்
03.12.1915 இல் உரும்பிராய் இந்துக் கல்லூரி வளவில் இந்துக் கல்லூரி அதிகார சபையினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பாடசாலையே சைவத் தமிழ் வித்தியாசாலை, இடநெருக்கடி காரணமாக 1949 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஓடையம்பதி கற்பகவிநாயகர் ஆலயத்துக்கு உரிமையான காணியிற் கட்டடங்கள் அமைக்கப்பட்டு கற்பகபிள்ளையார் வீதியில் சைவத் தமிழ் வித்தியாசாரலை இடமாற்றம் செய்யப்பட்டது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி
1911 ஆம் ஆண்டு இவ்வூர் பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக் கல்லூரி சமீபத்திற் பவளவிழாவைக் கொண்டாடியதுடன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வரலாறுகளை உள்ளடக்கிய பவளவிழா மலரினையும் வெளியீடு செய்தது.
|